NFSComt https://m.facebook.com/nafras.mass?ref=bookmarks
nfscomt.blogspot.com
nfscomt.blogspot.com

அம்பாரை மத்தியமுகாம் பொலிஸ் பிரிவில் 11ஆம் கிராமத்திலுள்ள வீடொன்றில் இன்று நள்ளிரவு தீ வைப்பு..





Nfs media
அம்பாரை மத்தியமுகாம் பொலிஸ் பிரிவில் 11ஆம் கிராமத்திலுள்ள வீடொன்றில் இன்று நள்ளிரவு வேளையில் முகமூடி அணிந்த 04 நபர்கள் வயோதிபரை தாக்கியதுடன், மோட்டார் சைக்கிளையும் தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மத்தியமுகாம் பொலிஸார் தெரிவித்தனர்.


இன்று (9) நள்ளிரவு வேளையில் தலைக்கவசம் மற்றும் முகமூடி அணிந்த 04 பேர்கள் வீட்டின் சுவரின் மேலால் பாய்ந்து வந்து வெளியில் உறங்கி கொண்டிருந்த வயோதிப தந்தையை தாக்கியுள்ளதுடன் அவரது 03வது மகனையும் விசாரித்துள்ளனர்.

பின்னர் வயோதிபர் கூக்குரலிட்டதையடுத்து வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொழுத்தி விட்டு இக்கும்பல் இரு மோட்டார் சைக்கிலில் தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் அம்பாரை புலனாய்வு பொலிஸார் மோப்ப நாய் சகிதம் மத்தியமுகாம் பொலிஸாருடன் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அம்பாரை மத்தியமுகாம் பொலிஸ் பிரிவில் 11ஆம் கிராமத்திலுள்ள வீடொன்றில் இன்று நள்ளிரவு தீ வைப்பு.. அம்பாரை மத்தியமுகாம் பொலிஸ் பிரிவில் 11ஆம் கிராமத்திலுள்ள வீடொன்றில் இன்று நள்ளிரவு தீ வைப்பு.. Reviewed by NFSComt on December 09, 2018 Rating: 5

1 comment:

nfscomt.blogspot.com
Theme images by RBFried. Powered by Blogger.